Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை கேப்டன் கடைசி வரிசையில், மனைவி முதல் வரிசையில்...

Webdunia
வியாழன், 9 ஆகஸ்ட் 2018 (16:23 IST)
இந்திய கிரிக்கெட் கோலி தலைமையில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. 
இங்கிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணிக்கு, இந்திய தூதரகம் அழைப்பு விடுத்திருந்தது. அங்கு இந்திய அணி வீரர்களை கெளரவித்தனர். 
 
இந்த விருந்தில் கலந்து கொண்ட இந்திய அணி வீரர்கள் கலந்துக்கொண்டனர். கேப்டன் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா சர்மாவும் இந்த விருந்தில் கலந்து கொண்டார். 
 
இறுதியாக அனைவரும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அந்த புகைப்படத்தில் முதல் வரிசையில் அனுஷ்கா சர்மா நின்று போஸ் கொடுத்தார். ஆனால், துணை கேப்டன் ரகானே கடைசி வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார். 
 
இந்த புகைப்படம் பிசிசிஐ சார்பாக எடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வமாக எடுக்கப்பட்டதால் இதை கண்ட நெட்டிசன்கள் பலர் பாலிபுட் நடிகைக்கு இந்திய அணியில் என்ன வேலை? துணை கேப்டன் கடைசி வரிசையில், மனைவி முதல் வரிசையிலா? என பல விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். 
 
இதற்கு முன்னர்தான் வீரர்கள் தங்களது மனைவி, தோழிகளுடன் அதிக நேரத்தை செலவிடுவதை குறைத்து, போட்டிகளில் கவனத்தை செலுத்துமாறு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments