Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் காதலிகளை அழைத்து செல்ல தடை: கிரிக்கெட் வாரியம்

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் காதலிகளை அழைத்து செல்ல தடை: கிரிக்கெட் வாரியம்
, திங்கள், 22 டிசம்பர் 2014 (12:23 IST)
வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் பங்குபெறும்போது, வீரர்கள் தங்கள் காதலிகளை அழைத்து செல்ல தடைவிதித்துள்ளது, இந்திய கிரிக்கெட் வாரியம்.
 
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், மற்றும் 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி ஆகியவற்றில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில், எஞ்சிய 2 டெஸ்ட் போட்டிகள் ஜனவரி 10 ஆம் தேதியுடன் முடிகிறது.
 
பின் 3 நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி முதல் பிப்ரவரி வரை நடக்கவுள்ளது.
பின்னர் உலக கோப்பை போட்டிகள் பிப்ரவரி முதல் மார்ச் வரை ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கிறது. எனவே 4 மாதங்கள் வரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் இருப்பதால், இந்திய வீரர்கள் தங்கள் மனைவிகளுடன் இருக்க கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்தது. 
 
எனினும் வீரர்களின் காதலிக்கு, கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இதன் காரணமாக இளம் வீரர் வீராட் கோலி தன் காதலி அனுஷ்கா சர்மாவை அழைத்து செல்ல முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil