இந்திய வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை; வழிவிடாத பிசிசிஐ மீது நடவடிக்கை

Webdunia
சனி, 11 நவம்பர் 2017 (13:40 IST)
தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்கு முறையை ஏற்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததையடுத்து பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க போவதாக தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.


 

 
தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விளையாட்டுகளில் வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு பங்கேற்பதை தடுக்க பல விதிமுறைகளை விதித்துள்ளது. வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்தி தகுதி அளிக்கும் பணியை செய்து வருகிறது. அனைத்து விளையாட்டுகளின் அமைப்புகளும் இந்த ஒழுங்கு முறையை பின்பற்றி வருகின்றன.
 
ஆனால், பிசிசிஐ மட்டும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் ஒழுங்கு முறையை ஏற்க மறுத்துள்ளது. பிசிசிஐ நடத்தும் ஊக்க மருந்து சோதனை நம்பகத்தன்மை வாய்ந்ததுதான் என்றும், பிசிசிஐ அரசுசார் அமைப்பு அல்ல எனவே தனியாக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் சோதனை தேவையில்லை என பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார்.
 
பிசிசிஐ மறுப்பு தெரிவித்தையடுத்து தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு பிசிசிஐ மீது நடவடிக்கை எடுக்க போவதாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி.. பெங்களூரை பந்தாடிய ராஜஸ்தான்..!

அம்பயர் தவறான முடிவால் தோற்றோம்.. கடைசி பந்தில் வெற்றியை பறிகொடுத்த கொல்கத்தா அணி குற்றச்சாட்டு..!

கடைசி பந்தில் ரன் எடுக்காமல் கோட்டை விட்ட டெல்லி.. 1 ரன் வித்தியாசத்தில் குஜராத்திடம் தோல்வி..!

மும்பை தோல்வி அடைந்தாலும் ஹர்திக் பாண்டியா தான் ரியல் வின்னர்.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஆர்சிபி - சிஎஸ்கே மேட்ச் பார்க்க வந்த அனுஷ்கா ஷர்மா.. அணிந்திருந்த டீசர்ட் விலை என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments