Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

vinoth
வியாழன், 21 ஆகஸ்ட் 2025 (09:55 IST)
இந்திய அணி தற்போது மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மூன்று கேப்டன்கள் இந்திய அணியைக் கடந்த சில மாதங்களாக வழிநடத்தி வருகின்றனர். டெஸ்ட் போட்டிகளில் ஷுப்மன் கில்லும், டி 20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவும் ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் ஷர்மாவும் வழிநடத்துகின்றனர்.

2027 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பைத் தொடர் வரவுள்ள நிலையில் புதிய இளம் இந்திய அணியைக் கட்டமைக்க பிசிசிஐ முயல்வதாக தெரிகிறது. அதனால் மூத்த வீரர்களான ரோஹித் மற்றும் கோலி ஆகியோரை ஓரம்கட்ட நினைப்பதாக சொல்லப்படுகிறது.

தற்போது 38 வயதாகும் ரோஹித் ஷர்மா அடுத்த உலகக் கோப்பையில் விளையாட விரும்பினாலும் அதற்கான சாத்தியங்கள் தெரியவில்லை. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்கு ஒருநாள் போட்டிகளுக்குப் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிக்க ஆலோசித்து வருவதாக தற்போது தகவல் பரவத் தொடங்கியுள்ளது. ரோஹித் ஷர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து மட்டும் நீக்கப்பட்டு வீரராக அணிக்குள் தொடர்வார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒருநாள் போட்டிகளுக்கு ஸ்ரேயாஸைக் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டம்?

ஜெய்ஸ்வாலும் ஸ்ரேயாஸும் சுயநலமற்ற வீரர்கள்… ஆனால் அதுதான் பிரச்சனை –அஸ்வின் ஆதங்கம்!

ஆசிய கோப்பை அணி தேர்வு குறித்த விமர்சனங்கள்: கவாஸ்கர் பதிலடி..!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments