Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபடியும் முதல்ல இருந்தா?... சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பிசிசிஐ?

vinoth
வியாழன், 11 ஜூலை 2024 (11:56 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய அணிகள் ஒரே க்ரூப்பில் ஏ பிரிவில் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இரு அணிகள் மோதும் போட்டி மார்ச் 1 ஆம் தேதி நடக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி மோதும் போட்டிகள் அனைத்தையும் லாகூர் மைதானத்தில் நடத்த வேண்டும் என பிசிசிஐ, ஐசிசிக்கு கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்பட்டது. இந்தியா vs பங்களாதேஷ் மற்றும் இந்தியா vs நியுசிலாந்து அணிகள் ஆகிய போட்டிகளை பிப்ரவரி 20 மற்றும் 23 ஆகிய தேதிகளில் நடத்தவுள்ளதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இலங்கையில் நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments