Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கதேச கிரிக்கெட் வீரர் ரூபெல் ஹொசைன் மீது கற்பழிப்பு புகார்

வங்கதேச கிரிக்கெட் வீரர் ரூபெல் ஹொசைன் மீது கற்பழிப்பு புகார்
, வியாழன், 8 ஜனவரி 2015 (17:09 IST)
வங்கதேச கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரூபெல் ஹொசைன் கற்பழிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
வங்காள தேச அணியின் வலது கை வேகப்பந்து வீச்சாளர் ரூபெல் ஹொசைன். ஹொசைன் வங்காள தேச்சத்துக்காக 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 32 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார். 53 ஒரு நாள் போட்டிகளில் 69 விக்கெட்டுகளை எடுத்து உள்ளார்.
 

ரூபெல் ஹொசைன்..
 
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் உட்பட 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவர் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட வங்காள தேச அணிக்காகத் தேர்வு செய்யபட்டுள்ளார்.
 
இந்நிலையில், ஹொசைன் மீது வங்காள தேச நடிகை நஸ்னின் அக்தர் ஹேப்பி என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்து விட்டதாக புகார் அளித்துள்ளார்.
 
webdunia

நஸ்னின் அக்தர் ஹேப்பி..
 
கைது செய்யபட்ட ஹொசைன் டாக்கா மாநகர கோர்ட்டில் ஆஜர் படுத்தபட்டார். நீதிபதி ஹொசைனின் ஜாமீன் மனுவை நிராகரித்தார். அடுத்த விசாரணை வரை அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.
 
இந்நிலையில், வழக்கை திரும்பப் பெறப் போவதாகவும் ஹொசைன் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து உள்ளதாகவும்  ஹேப்பி நிருபர்களிடம் தெரிவித்து உள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil