Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதி வாய்ப்ப பத்தி இப்போ பேசமுடியாது.. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம்!

Webdunia
சனி, 28 அக்டோபர் 2023 (07:00 IST)
பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று சென்னயில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 270 ரன்கள் எடுத்தது.

இந்த நிலையில் 271 என்ற இலக்கை நோக்கி தற்போது தென் ஆப்பிரிக்கா அணி விளையாடிய தென் ஆப்பிரிக்கா பரபரப்பான திரில் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு மேலும் பலவீனமாகியுள்ளது.

தோல்விக்குப் பிறகு பேசிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் “நாங்கள் களத்தில் மிகச்சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம். ஆனால் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். போட்டியில் டி ஆர் எஸ் முறையும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியாக நாங்கள் அப்பீல் செய்த விக்கெட்டுக்கு நடுவர் விக்கெட் கொடுத்திருந்தால் போட்டியின் முடிவே மாறியிருக்கும். இப்போதைக்கு நாங்கள் அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியாது. அடுத்த மூன்று போட்டிகளையும் வென்ற பிறகு பிற அணிகளின் வெற்றி தோல்விகளை பொறுத்தே அரையிறுதிப் பற்றி யோசிக்க முடியும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் பிரிமியர் லீக்.. பெங்களூரு அணிக்கு 2வது வெற்றி.. கேப்டன் ஸ்மிருதி மந்தனா அபார பேட்டிங்..!

துபாயில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்து சாப்பிடும் விராட் கோலி… என்ன காரணம்?

கிரிக்கெட்டர்கள் PR குழு வைத்துக் கொள்வது எவ்வளவு முக்கியம் என்று இப்போது புரிகிறது- ரஹானே ஆதங்கம்!

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

அடுத்த கட்டுரையில்
Show comments