Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பாபர் அசாம்!

Webdunia
புதன், 15 நவம்பர் 2023 (20:35 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தால் வெளியேறிய நிலையில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து பாபர் அசாம் விலகியுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
இந்தியாவில் நடந்து வருகிறது. இத்தொடரில், இந்தியா,பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்றன. இந்த லீக் சுற்றுகள் முடிவில் பல  நேபாளம், இங்கிலாந்து, வங்கதேசம்,பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெளியேறின.

இந்த நிலையில் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, 9 போட்டிகளில் நான்கில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றம் அளித்தது. இதனால் உலகக் கோப்பை தொடரில் இருந்து லீக் போட்டிகளோடு வெளியேறியது.

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இன்சமாம் உல் ஹக் தன்னுடைய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

 இதையடுத்து, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது, அதன் தேர்வுக்குழு  உறுப்பினர்களை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பதவி நீக்கம் செய்தது.

இந்த நிலையில் இன்று  பாகிஸ்தான் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் பாபர் அசாம்.

நடப்பு  உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றில்  இருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து, டி 20, டெஸ்ட், ஒருநாள் என அனைத்து வகை போட்டிகளில் இருந்து கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் பாபர் அசாம். விரைவில் புதிதாக கேப்டன் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

இன்று முதல் பிரம்மாண்டமாக தொடங்குகிறது டிஎன்பிஎல் சீசன் 8: எந்த சேனலில் ஒளிபரப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments