Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெஷல் எல்லாம் ஒன்றும் இல்லை… பாக் கேப்டன் பாபர் ஆசாம்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (16:04 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டி கடந்த 10 மாதங்களுக்குப் பிறகு ஆசியக்கோப்பையில் நடக்க உள்ளது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி சமீபத்தில் வெளியான நிலையில் இந்தியா பாகிஸ்தான் ஆகஸ்ட் 28ஆம் தேதி மோத உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 5 நாடுகள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளன.

இந்த தொடரில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மேலும் முதல் சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தால்  அடுத்த சுற்றில் 2 முறை மோத வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் குறைந்த நாட்கள் இடைவெளியில் மூன்று முறை இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் நடக்க உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் போட்டியைக் காண இரு நாட்டு வீரர்களும் மிகவும் ஆர்வமாக உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம், ‘இந்தியாவுக்கு எதிரான போட்டி மற்ற அணிகளுடனான போட்டி போலதான். அந்த போட்டிக்கும் சாதாராண போட்டி போலவே தயாராவோம்’ எனக் கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடர்களில் பாகிஸ்தான் அணி இந்தியாவை ஒருமுறை மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

அடுத்த கட்டுரையில்
Show comments