Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆவேஷ் கான் அபார பவுலிங்க்… சொதப்பிய ஆர் சி பி பேட்ஸ்மேன்கள்.. ராஜஸ்தான் அணிக்கு நிர்ணயித்த இலக்கு இதுதான்!

vinoth
புதன், 22 மே 2024 (21:14 IST)
ஐபிஎல் 17 ஆவது சீசனில்  இன்று நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீச முடிவு செய்தார்.

அதையடுத்து பேட்டிங் ஆடவந்த ஆர் சி பி அணி ஆரம்பத்தில் இருந்தே சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. இதனால் அந்த அணியால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. அந்த அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 33 ரன்களும், ரஜத் படிதார் 34 ரன்களும் சேர்த்தனர்.

கடைசி நேரத்தில் வந்து அதிரடியாக ஆடிய மஹிபால் லோம்ரார் 17 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். இதனால் ஆர் சி பி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 172 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டிபிடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ராஜஸ்தான் தரப்பில் ஆவேஷ் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்களையும், அஷ்வின் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 டி20 உலகக்கோப்பையில் தகுதி பெற்ற 11வது அணி.. இன்னும் 3 அணிகள் எவை எவை?

அடித்தது சதம் தான்.. ஆனால் செய்ததோ உலக சாதனை.. ரிஷப் பண்ட்டிற்கு குவியும் வாழ்த்துக்கள்

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

அடுத்த கட்டுரையில்
Show comments