Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்திரேலியாவின் மானத்தை காப்பாற்றிய மழை

ஆஸ்திரேலியாவின் மானத்தை காப்பாற்றிய மழை
, சனி, 3 ஜூன் 2017 (16:33 IST)
ஐசிசி சாம்பியன்ஸ் தொடர் இரண்டாவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் மானத்தை மழை குறுக்கிட்டு காப்பாற்றியது.


 

 
இங்கிலாந்து நாட்டில் மினி உலக கோப்பை என்று அழைக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின.
 
இப்போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து மீண்டும் மழை குறுக்கிட்டதால் டக்வெர்த் முறைப்படி போட்டி 33 ஓவராக குறைக்கப்பட்டது. அதன்படி ஆஸ்திரேலிய அணிக்கு 33 ஓவரில் 235 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
 
ஆஸ்திரேலிய அணி 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்தப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
 
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் மானம் மழையால் காப்பாற்றப்பட்டது. நியூசிலாந்து அணியிடம் படுதோல்வி அடைய வேண்டிய போட்டியில் மழையால் தப்பி பிழைத்தது ஆஸ்திரேலிய அணி.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனிக்கு எதற்கு ஏ கிரேட் சம்பளம்? ராமச்சந்திர குஹா காட்டம்!!