Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாஜாலம் செய்த இந்திய பவுலர்கள்… ஆல் அவுட் ஆன ஆஸி!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (11:14 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற் பந்துவீச்சாளர்கள் மிக அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனை அடுத்து தற்போது ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. நேற்றைய முதல் நாள் முடிவில் 156 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்களை இழந்து ஆட்டத்தை முடித்தது.

இரண்டாம் நாளை இன்று தொடங்கிய ஆஸி. அணி முதலில் சில ஓவர்களை சிறப்பாக எதிர்கொண்டாலும், அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 197 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆகியுள்ளனர்.

இன்று 40 ரன்களை சேர்ப்பதற்குள் 6 விக்கெட்களை இழந்து பரிதாபமான நிலைக்கு ஆளாகியுள்ளது ஆஸி அணி.  முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணி 88 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை அடுத்து இனி வங்கதேசத்திற்கும் இந்திய கிரிக்கெட் அணி செல்லாதா? பரபரப்பு தகவல்..!

5 விக்கெட்டுக்களை இழந்தாலும் ஸ்மித், புரூக் அபார ஆட்டம்.. இங்கிலாந்து ஸ்கோர் விபரங்கள்..!

உலக சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜெண்ட்ஸ்: யுவராஜ் சிங் கேப்டன்.. முதல் போட்டியே பாகிஸ்தானுக்கு எதிராகவா?

சுப்மன் கில் அபார இரட்டை சதம்.. இந்திய பவுலர்கள் அசத்தல்.. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

ஜடேஜா அவுட்.. இரட்டை சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. 2வது டெஸ்ட்டின் ஸ்கோர் விபரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments