Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘ஆசியக் கோப்பை தொடர் இலங்கையில் நடக்காது…’ பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (09:05 IST)
இலங்கையில் நடக்க இருந்த ஆசியக் கோப்பை தொடர் ஐக்கிய அரபுகள் அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

ஆசிய கண்டத்தின் கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கான ஆசியக் கோப்பை தொடர் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் இந்தியா அதிகளவிலான கோப்பைகளை வென்ற நாடாக உள்ளது. இந்த ஆண்டு ஆசிய கோப்பை இலங்கையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் இலங்கையின் பொருளாதார சூழல் காரணமாக தற்போது ஆசிய கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதை இப்போது பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உறுதி செய்துள்ளார். மேலும் அமீரகத்தில் மட்டும்தான் ‘மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும்’ சொல்லப்படுகிறது.

ஆசியக் கோப்பை தொடர் ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பர் 7 வரை டி 20 தொடராக நடக்க உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments