Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திண்டுக்கல் அணிக்குத் தலைமைப் பயிற்சியாளரே இல்லை… TNPL கோப்பையை வென்ற பிறகு அஸ்வின் பேச்சு!

vinoth
திங்கள், 5 ஆகஸ்ட் 2024 (09:59 IST)
கடந்த சில வாரங்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் அணியை வீழ்த்தி திண்டுக்கல் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லைக்கா அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை அடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் பொறுப்புடன் விளையாடி 52 ரன்கள் சேர்த்தார். 18.2 ஓவர்களில் திண்டுக்கல் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இந்த வெற்றிக்குப் பின்னர் பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “இந்த வெற்றி ஒரு வேகத்தில் நடந்ததுதான். இத்தொடரின் ஆரம்பம் எங்களுக்கு சரியாக அமையவில்லை. சேலம் அணியிடம் தோற்ற ஒரே அணி நாங்கள்தான். அதன் பிறகு நாங்கள் வெற்றிப் பாதைக்கு திரும்பினோம். இந்த வெற்றிக்கு சரத்குமாரின் பங்களிப்பு அதிகம். அவர் மைதானத்தின் எந்த பக்கத்தில் நிறுத்தினாலும் ஜாண்ட்டி ரோட்ஸ் போல ஃபீல்ட் செய்தார். இந்த அணிக்கு தலைமைப் பயிற்சியாளர் கூட இல்லை. பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் கூட என் நண்பர்கள்தான்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று தொடங்குகிறது பாண்டிச்சேரி ப்ரீமியர் லீக் சீசன் 2!

200 ரன்கள்தான் இலக்கு… அடுத்த போட்டியில்… வைபவ் சூர்யவன்ஷியின் ஆசை!

வெற்றியை மட்டுமே யோசிக்க நாங்கள் முட்டாள்கள் அல்ல.. டிரா குறித்து பயிற்சியாளர் மார்கஸ்

எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவன்… பிரின்ஸை வாழ்த்திய கிங் கோலி!

‘டேய் அவன் எப்படி போட்டாலும் அடிக்கிறான்டா’ எனக் கதறும் பவுலர்கள்.. 52 பந்துகளில் சதமடித்து அசத்திய சூர்யவன்ஷி!

அடுத்த கட்டுரையில்
Show comments