Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாம்பியன்ஸ் கோப்பை சிறந்த அணியில் ரோஹித் ஷர்மாவைப் புறக்கணித்த அஸ்வின்… ரசிகர்கள் அதிருப்தி!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2025 (14:29 IST)
நடந்து முடிந்த சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தோல்வியேக் காணாமல் வெற்றி பெற்றது. இதன் மூலம் மூன்றாவது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையைக் கைபற்றி அதிக முறை கோப்பை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

இந்த தொடரில் இந்திய அணியில் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர்,கே எல் ராகுல், வருண் சக்ரவர்த்தி, ஷமி என எனப் பலரும் சிறப்பாக பங்காற்றினார். கடைசி போட்டியில் ரோஹித் ஷர்மா சிறப்பாக அடி அரைசதம் அடித்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்நிலையில் ஐசிசி இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்ட ஒரு கனவு அணியை உருவாக்கியுள்ளது அந்த அணியில் இந்திய அணியின் கோலி உள்ளிட்ட ஆறு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனால் கேப்டன் ரோஹித் ஷர்மா இடம்பெறவில்லை.

இந்நிலையில் இந்திய அணி முன்னாள் வீரர் அஸ்வின் வெளியிட்ட சிறந்த அணியிலும் ரோஹித் ஷர்மாவுக்கு இடமளிக்கவில்லை. இந்த தொடரில் அவர் சிறப்பாக விளையாடாவிட்டாலும் அணியை சிறப்பாக வழிநடத்தி, இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வின் அறிவித்த அணி
ரச்சின் ரவீந்தரா, பென் டக்கெட், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ஜோஷ் இங்க்லீஷ், டேவிட் மில்லர், ஓமர்சாய், மிட்செல் சாண்ட்னர்(கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, மேட் ஹென்றி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

பும்ரா இல்லாவிட்டால் இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விதான்… ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

அமெரிக்காவில் சி எஸ் கே நிர்வாகிகளோடு சஞ்சு சாம்சன் சந்திப்பு… அப்ப உண்மதான் போலயே!

அடுத்த கட்டுரையில்
Show comments