தொடரை கைப்பற்றியது இந்தியா: நான்கே நாட்களில் சரணடைந்தது நியூசிலாந்து!
தொடரை கைப்பற்றியது இந்தியா: நான்கே நாட்களில் சரணடைந்தது நியூசிலாந்து!
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடந்தது. 8 விக்கெட் இழப்பிற்கு 227 ரன்களுடன் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 376 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின்னர் வலுவான இலக்கை நோக்கி தனது பேட்டிங்கை தொடங்கிய நியூசிலாந்து அணி ஓரளவுக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தது. முதல் விக்கெட்டை 55 ரன்னிலும் இரண்டாவது விக்கெட்டை 104 ரன்னிலும் அந்த அணி இழந்தது. இதனை தொடர்ந்து வந்த நியூசிலாந்து அணி வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாத நியூசிலாந்து வீரர்கள் நான்காம் நாளான இன்றே இந்தியாவிடம் சரணடைந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் லாதம் மட்டுமே சிறப்பாக விளையாடி 74 ரன்கள் எடுத்தார். ரோஞ்சி 32 ரன்னும், குப்தில், நிக்கொல்ஸ் ஆகியோர் தலா 24 ரன்னும் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அஸ்வின், ஜடேஜா, முகமது சமி ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். புவனேஸ்வர் குமார் 1 விக்கெட்டை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என கைப்பற்றியுள்ளது.
சர்வேத அரங்கில் தனது 500-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி இந்திய அணி வெற்றி பெற்றது. அதே போல் இந்தியாவில் நடைபெறும் 250-வது டெஸ்ட் போட்டியான இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியா சாதனை புரிந்துள்ளது.