Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வுபெறும் திட்டம் இல்லை: மைக்கேல் கிளார்க் உறுதி

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2015 (09:27 IST)
தற்போதைய சூழலில் கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வுபெறும் திட்டம் எதுவும் இல்லை என ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 

 
2015 ஆஷஸ் கிரிக்கெட்டில் மைக்கேல் கிளார்க் தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரின் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இதுவரை 6 இன்னிங்சில் விளையாடிய கிளார்க் 94 ரன்களை  மட்டுமே சேகரித்துள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். இதன்காரணமாக கிளார்க் தனது கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது. 
 
இதுகுறித்து கிளார்க் கூறுகையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் களத்தில் பெரிதாக பிரகாசிக்க முடியவில்லை என்றால் இதுபோன்ற விமர்சனங்கள் அரங்கேறதான் செய்யும். எனினும் கிரிக்கெட்டில் எனக்கு இருக்கும் ஈடுபாடு குறித்து யாரும் விமர்சிக்க முடியாது. 
 
மேலும் ஆட்டத்திறனை மேம்படுத்த கடுமையான முயற்சிகளை செய்து வருகிறேன். இதற்காக ஓய்வு பெற மாட்டேன் என்று திட்டவட்டமாக கிளார்க் கூறியுள்ளார்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments