Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கோபக்காரர்: யுவராஜ்சிங்

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கோபக்காரர்: யுவராஜ்சிங்
, சனி, 25 அக்டோபர் 2014 (09:12 IST)
நமது இந்திய அணியின் இளம் நட்சத்திர வீரரான விராட் கோலி சற்று கோபக்காரர் என்று நமது இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறியுள்ளார்.
 
இலங்கை அணிக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், அத்தொடர்களுக்கு விராட் கோலி கேப்டனாக செயல்படுவார். 
 
இதுகுறித்து இந்திய வீரர் யுவராஜ்சிங் கூறுகையில், இளம் நட்சத்திர வீரரான விராட் கோலி ஒரு கோபக்கார இளைஞர். மேலும் கேப்டனாக செயல்படும் போது அணி தோல்வியுற்றால் மேலும் ஆக்ரோஷமாகி விடுவார்.

கடினமாக உழைப்பதிலும், போட்டியில் கவனம் செலுத்துவதிலும் ஒரு திறமையான வீரர் என்றார். வெளிநாட்டு தொடர்களின் போது வீரர்கள் தங்களுடன் மனைவி அல்லது காதலியை அழைத்துச் செல்வதில் தவறில்லை என்று யுவராஜ்சிங் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil