Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை டி20 கிரிக்கெட்: புதிய கேப்டனாக மலிங்கா நியமனம்

இலங்கை டி20 கிரிக்கெட்: புதிய கேப்டனாக மலிங்கா நியமனம்
, சனி, 16 மே 2015 (12:11 IST)
வேகப்பந்து வீச்சாளரரான மலிங்காவை, புதிய 20 ஓவர் கேப்டனாக இலங்கை கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
11 ஆவது உலகக் கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஜெயசூர்யா தலைமையிலான கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வந்த தேர்வாளர்கள் புதிய கேப்டனை நியமிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டனாக மேத்யூஸ் தொடர்ந்து நீடிக்கிறார். இவர் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளை வழிநடத்துவார். மேலும் 20 ஓவர் போட்டிகளை மலிங்கா வழிநடத்துவார் என  இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.  
 
வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடர் முதல் இங்கிலாந்து தொடர் வரை மேத்யூஸ் தொடர்ந்து கேப்டனாக வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துணை கேப்டனாக திரிமன்னே அறிவிக்கப்பட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil