Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா பாகிஸ்தான் போட்டியைப் பார்க்க சென்ற மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் அமெரிக்காவில் மரணம்!

vinoth
செவ்வாய், 11 ஜூன் 2024 (07:32 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை லீக் போட்டி நேற்று முன்தினம் நியூயார்க்கில் நடந்தது. இந்த போட்டியை காண பிசிசிஐ மற்றும் பல மாநில அணி நிர்வாகிகள் அமெரிக்காவுக்கு சென்றனர். அதில் மும்பை கிரிக்கெட் வாரிய சங்க தலைவர் அமோல் காலேவும் ஒருவர்.

போட்டியைப் பார்த்துவிட்டு ஹோட்டல் அறைக்கு திரும்பிய அவர், மாரடைப்புக் காரணமாக இயற்கை எய்தியுள்ளார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பிசிசிஐ நிர்வாகிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் உடற்கூராய்வு செய்யப்பட்ட பின்னர் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

பொறியியல் பட்டதாரியான அமோல், மும்பை கிரிக்கெட் வாரியத்துக்கு புத்துணர்ச்சி ஊட்டியவர். மும்பை வாரியம் நடத்தும் போட்டிகளில் வீரர்களுக்கு அதிக சம்பளம் வழங்கியும், மும்பை வான்கடே மைதானத்தைப் புதுப்பித்தும் நற்பெயரைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆக்ரோஷமாக கொண்டாடி கோமாளியாக விரும்பவில்லை.. கோஹ்லியை சீண்டுகிறாரா பும்ரா?

இறுதிப் போட்டிக்கு செல்ல போவது யார்? பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் கடும் மோதல்!

அப்பாவ விட ரொம்ப எமோஷனலா இருக்கானே!.. குஜராத் தோல்வியால் அழுத நெஹ்ரா மகன்!

போட்டி கைவிட்டு சென்றால் பும்ராவைக் கூப்பிடுவேன்… ஹர்திக் பாண்ட்யா பாராட்டு!

இறுதிப் போட்டி அதிர்ஷ்டக் குழந்தை ஹேசில்வுட்… RCB அணிக்கும் லக்கி பாயாக அமைவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments