Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராயுடு கையில ட்ராபிய குடுங்க..! அந்த மனசுதான் ‘தல’ தோனி!

ambati Rayudu
Webdunia
செவ்வாய், 30 மே 2023 (08:41 IST)
நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்ற நிலையில் தோனி செய்த சம்பவம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.



நேற்று நடந்த ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் அணியும் மோதிக் கொண்டன. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 214 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸிங் இறங்கியபோது மழை பெய்தது.
இதனால் போட்டிகள் தாமதமான நிலையில் 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆரம்பம் முதலே அடித்து நொறுக்க தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலக்கை எட்டி 5வது முறையாக சாம்பியன்ஸ் பட்டம் வென்றது.

இந்த ஐபிஎல் போட்டிதான் தனது கடைசி போட்டி எனவும், இறுதி போட்டிக்கு பின் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற போவதாகவும் அம்பத்தி ராயுடு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதனால் இந்த வெற்றியை அவருக்கான Farewell மேட்ச்சாகவே சிஎஸ்கே கருதியது.

ஐபிஎல் ட்ராபியை பெற தோனி, ராயுடு, ஜடேஜா மூன்று பேரும் மேடையேறியபோது ராயுடுவின் கைகளால் ட்ராபியை வாங்க சொல்லி கேப்டன் தோனி அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டார். கேப்டனாக இருந்தாலும் ரிட்டயர்ட் ஆகும் ராயுடுவை கொண்டாடும் விதமாக அவரது கையில் ட்ராபியை பெற வைத்து அருகில் நின்று ரசித்த தோனியின் அந்த செயல் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ’அந்த மனசுதான் சார் தல தோனி’ என பலரும் தோனியின் செயல் குறித்து மகிழ்ந்துள்ளனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments