Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

vinoth
வெள்ளி, 8 நவம்பர் 2024 (10:33 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் அந்த அணியின் அல்ஸாரி ஜோசப், அணிக் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதம் செய்து மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஜோசப் ஒரு ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார். ஆனாலும் ஃபீல்டிங் செட் செய்வதில் அவருக்கும் ஹோப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஜோசப் பெவிலியனுக்குத் திரும்பினார். பின்னர் அவர் திரும்பி வந்து தனது ஓவர்களை வீசினார்.

ஆனால் அல்சாரி ஜோசப் வெளியே சென்ற போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ஓவரில் 10 வீரர்களோடு மட்டும் விளையாடியது. இந்நிலையில் அல்ஸாரி ஜோசப்பின் இந்த செயலைக் கண்டித்துள்ள கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அமைப்பு அவருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

இதையடுத்து  ‘ஆட்டத்தின் மீதான ஆர்வம் என்னை கட்டுப்பாட்டை இழக்க வைத்துவிட்டது. அதற்காக நான் கேப்டன், சக வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

பிரான்ச்சைஸ் போட்டிகள் காவு வாங்கிய மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர்… சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments