Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

vinoth
வெள்ளி, 8 நவம்பர் 2024 (10:33 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடி வரும் நிலையில் அந்த அணியின் அல்ஸாரி ஜோசப், அணிக் கேப்டன் ஷாய் ஹோப்புடன் வாக்குவாதம் செய்து மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். ஜோசப் ஒரு ஓவரை விக்கெட் மெய்டனாக வீசினார். ஆனாலும் ஃபீல்டிங் செட் செய்வதில் அவருக்கும் ஹோப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஜோசப் பெவிலியனுக்குத் திரும்பினார். பின்னர் அவர் திரும்பி வந்து தனது ஓவர்களை வீசினார்.

ஆனால் அல்சாரி ஜோசப் வெளியே சென்ற போது வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ஓவரில் 10 வீரர்களோடு மட்டும் விளையாடியது. இந்நிலையில் அல்ஸாரி ஜோசப்பின் இந்த செயலைக் கண்டித்துள்ள கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் அமைப்பு அவருக்கு அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது.

இதையடுத்து  ‘ஆட்டத்தின் மீதான ஆர்வம் என்னை கட்டுப்பாட்டை இழக்க வைத்துவிட்டது. அதற்காக நான் கேப்டன், சக வீரர்கள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments