Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில்.... அஹமதாபாத் அணிக்கு பெயர் கிடைத்தது..

Webdunia
புதன், 9 பிப்ரவரி 2022 (15:38 IST)
ஐபிஎல் தொடரில் புதிதாக இணைந்துள்ள அஹமதாபாத் அணிக்கு பெயர் கிடைத்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 8 அணிகள் விளையாடி கொண்டிருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு முதல் கூடுதலாக இரண்டு அணிகள் என மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அகமதாபாத் மற்றும் லக்னோ நகரங்களைக் கொண்ட 2 புதிய அணிகள்  புதிதாக உருவாக்கப்பட்டது.

மேலும் லக்னோ அணியை 7 ஆயிரத்து 90 கோடிக்கு ஆர்பிஎஸ்ஜி நிறுவனமும் அகமதாபாத் அணியை ரூபாய் 5200 கோடிக்கு சிவிஎஸ் கேபிடல் பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம் வாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடரில்   இவ்விரு அணிகளும் விளையாட உள்ளதால் ரசிகர்களிடையே  எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று அஹமதாபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என்று பெயர் கிடைத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ப்ளே ஆஃபில் இருந்து வெளியேறப் போவது யார்? டாஸ் வென்ற சஞ்சு சாம்சன் எடுத்த முடிவு!

“டிவிட்டரில் எந்த நல்லதும் நடந்ததில்லை… வீண் சர்ச்சைதான்” – சமுக ஊடகங்கள் குறித்து தோனி!

மாநில அளவிலான தாங் டா விளையாட்டு போட்டிகளில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

ஐபிஎல் தொடரின் போது சர்வதேச போட்டிகள் வைக்கக் கூடாது… ஜோஸ் பட்லர் கருத்து!

கோலியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்… பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஆர் சி பி!

அடுத்த கட்டுரையில்
Show comments