Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விராட் கோலிக்குப் பின் அவர் பேட்டிங்கைதான் ரசித்துப் பார்க்கிறேன் – சேவாக் சிலாகிப்பு!

vinoth
புதன், 21 மே 2025 (08:33 IST)
நடந்து வரும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பேட்ஸ்மேன்களில் ஒருவராக சாய் சுதர்சன் இருந்து வருகிறார். குஜராத் அணிக்காக ஆடிவரும் அவர் தற்போது அதிக ரன்கள் அடித்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியைப் பெற்றுள்ளார்.

ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார். தற்போதைய டி 20 போட்டிகளில் வீரர்கள் விதவிதமான ஷாட்களைக் கண்டறிந்து விளையாடி வருகிறார்கள். ஆனால் சாய்சுதர்சன் பழைய டெஸ்ட் கால பேட்ஸ்மேன்கள் போன்ற ஒரு மரபான வீரர். மரபான ஷாட்களை மட்டுமே ஆடி ரன்களை சேர்த்து வருவது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் சாய் சுதர்சனை இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் சிலாகித்துள்ளார். அதில் “விராட் கோலிக்குப் பிறகு ஒருவரின் பேட்டிங்கை நான் ரசித்துப் பார்க்கிறேன் என்றால் அது சாய் சுதர்சன் பேட்டிங்தான். ” எனக் கூறியுள்ளார். முன்னதாக இந்தியாவுக்காக மூன்று விதமான போட்டிகளிலும் விளையாடும் திறன் கொண்டவர் சாய் சுதர்சன் என்று அவர் பாராட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆறுதல் வெற்றி கூட இல்லை.. சிஎஸ்கேவுக்கு இன்னொரு தோல்வி..!

மும்பை இந்தியன்ஸ் அணியில் மூன்று வெளிநாட்டு வீரர்கள் சேர்ப்பு!

நான் எப்போ அழுதேன்… கண்ணு கூசுச்சு – முதல் போட்டி பற்றி மனம் திறந்த சூர்யவன்ஷி!

மைதானத்தில் மோதிக் கொண்ட திக்வேஷ் - அபிஷேக் சர்மா! விளையாட தடை விதித்த ஐபிஎல் நிர்வாகம்!

திருமணமான முதல் 6 மாதத்தில் 21 நாட்கள் மட்டுமே ஒன்றாக இருந்தோம்- அனுஷ்கா ஷர்மா

அடுத்த கட்டுரையில்
Show comments