Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென்னாப்பிரிக்கா இன்னும் முழுத் திறமையைக் காட்டவில்லை.. முன்னாள் வீரர் நம்பிக்கை!

vinoth
திங்கள், 24 ஜூன் 2024 (15:49 IST)
உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது சூப்பர் 8 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இன்று நடந்த ஒரு போட்டி மேற்கு இந்திய தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடந்த நிலையில் இதில் தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. வழக்கமாக ஐசிசி தொடர்களில் தொடர்ந்து சொதப்பும் தென்னாப்பிரிக்கா இந்த முறை ஒரு போட்டியைக் கூட தோற்காமல் சிறப்பாக விளையாடியுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணியின் இந்த வெற்றிகள் குறித்து பேசியுள்ள அந்த அணியின் முன்னாள் கேப்டன் டிவில்லியர்ஸ் “தென்னாப்பிரிக்கா அணி இன்னும் முழுமையாக தங்கள் திறமையை வெளிக்காட்டவில்லை. ஆனால் அரையிறுதிக்குள் சென்றுள்ளார்கள். கோப்பைக்கு அருகில் உள்ளனர். அவர்களின் சிறந்த ஆட்டத்தை இனிமேல்தான் காணப்போகிறோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. 137 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன மே.இ.தீவுகள்..!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு தாமதம்… ரசிகர்கள் புலம்பல்!

ரஞ்சிக் கோப்பை தொடரில் கோலி விளையாட மாட்டார்… வெளியான தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான அணியை இன்று அறிவிக்கவுள்ள அகார்கர் & ரோஹித் ஷர்மா!

ரஞ்சி போட்டியில் கேப்டன் பொறுப்பை ஏற்க மறுத்த ரிஷப் பண்ட்… இதுதான் காரணமாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments