Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 ஆவது ஒரு நாள் போட்டி: இங்கிலாந்து 206 ரன்கள் குவித்தது

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (16:37 IST)
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கான 4 ஆவது ஒரு நாள் போட்டி இன்று செப்டம்பர் 2 ஆம் தேதி பர்மிங்காமில் நடக்கவுள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது.
 

 

டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இங்கிலாந்து இன்னிங்சை குக் மற்றும் ஏல்ஸ் தொடங்கினர். இங்கிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.  ஏல்ஸ் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் போல்ட் ஆக்கினார். பின்,கேப்டன் குக்கும்  9 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த பேல்லன்ஸ் ஷமியின் பந்துவீச்சில் பலியானார். 10 ஓவர் முடிவதற்குள் இங்கிலாந்து அணி 3  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய  இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 49.3 ஓவர்களில் 206 ரன்கள் குவித்தது. 

ஒரு நாள் போட்டிகளில் இதுவரை இரண்டு போட்டிகளில் அபார வெற்றி பெற்ற இந்தியா இன்று தனது ஹாட்ரிக் வெற்றியைப் பெறுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments