Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹூட்ஹூட் புயல் எதிரொலி: 3 ஆவது ஒரு நாள் போட்டி ரத்து

ஹூட்ஹூட் புயல் எதிரொலி: 3 ஆவது ஒரு நாள் போட்டி ரத்து
, திங்கள், 13 அக்டோபர் 2014 (10:54 IST)
இந்தியா–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடக்கவிருந்த  3 ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மோசமான வானிலை காரணமாக ரத்து செய்யப்படுகிறது.
 
சில தினங்களாகவே ஆந்திர மாநிலத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ஒரு வார்த்தை என்றால் அது கண்டிப்பாக ஹூட்ஹூட் என்றால் மிகையாகாது. அக், 12 நேற்று ஹூட்ஹூட் புயல் விசாகப்பட்டினம் நகரை கடந்த போது பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. 
இதன் விளைவு கிரிக்கெட் மைதானத்தையும் விட்டுவைக்கவில்லை. இதனால் விசாகப்பட்டினம் மைதானம் சற்று சேதமடைந்துள்ளது. மேலும் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் இங்கு நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி ரத்துசெய்யப்படுவதாக இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இணைச் செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 
 
இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் தற்போது 4 போட்டி கொண்ட கிரிக்கெட் தொடராக மாற்றியமைக்கப்பட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil