Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரிட்சை

3 ஆவது ஒரு நாள் போட்டி: இந்தியா - ஜிம்பாப்வே பலப்பரிட்சை
, செவ்வாய், 14 ஜூலை 2015 (09:27 IST)
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3 ஆவது ஒரு நாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
 
இந்திய அணி ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 3 ஒரு நாள் போட்டி, 2 டி20 கிரிக்கெட் போட்டி ஆகியவைகள் அடங்கும். மூத்த வீரர்களான தோனி, கோலி, ரெய்னா, அஸ்வின் போன்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இத்தொடருக்கு இளம் வீரர் ரகானே தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதில் நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி போராடி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. பின் நடைபெற்ற 2 ஆவது ஒரு நாள் போட்டியில்  62 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரையும் வென்றது.
 
இந்நிலையில் இருஅணிகள் மோதும் 3 ஆவது ஒரு நாள் போட்டி  இன்று நடக்கவுள்ளது. கடந்த ஆட்டத்தில் இந்திய அணியின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது. இதேமுனைப்பில் இந்திய அணி இன்றும் செயல்பட்டால் தொடரை முழுமையாக வெல்லலாம். மேலும் இந்திய அணியில்  ராயுடு இல்லாதது சற்று ஏமாற்றமே.  ஜிம்பாப்வே அணி கடந்த ஆட்டங்களில் சொதப்பியதால் இம்முறை ஆறுதல் வெற்றிபெற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.

Share this Story:

Follow Webdunia tamil