சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக விளையாடிய ஓஜா 31 பந்தில் அரை சதம் எடுத்தார்.
அந்த அணியின் தொடக்க வீரர் லாம்ப் அதிரடியா விளையாடி 30 ரன்னில் ஆட்டம் இழந்தார். பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஓஜாவுடன் இணை சேர்ந்த பாசில் அதிரடியாக விளையாடினார்.
31 பந்தில் ஓஜா அரை சதம் அடித்தார். எதிர்முறையில் விளையாடிக் கொண்டிருந்த பாசில் 17 பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து களம் இறங்கிய அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பத்தான் 8 ரன்னில் ஆட்டம் இழந்தார். தற்போது ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 3 விக்கெட் 118 ரன்கள் எடுத்துள்ளது.