Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2 வது டி20 போட்டி இன்று - வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

2 வது டி20 போட்டி இன்று - வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி
, திங்கள், 5 அக்டோபர் 2015 (13:58 IST)
இந்தியா- தென்னாப்பிரிக்க அணிகளுக்குடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கிறது.


 


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க  கிரிக்கெட் அணி, முதல் டி20 போட்டியில் வெற்றிபெற்றது. இரண்டாவது போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் தென்னாப்பிரிக்கா அணி தொடரை கைப்பற்றி விடும், இதனால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இதனால் தற்போது தீவிர பயிற்ச்சியில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடைபெறும் இந்தப் போட்டி இரவு ஏழு மணியளவில் தொடங்குகிறது.

மேலும், போட்டி நடைபெறும் கட்டாக் மைதானத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளன. 63 படைப்பரிவு போலீசார், உடனடி மீட்பு குழு நான்கு, இரண்டு தீவிரவாத தடுப்புப் படை என பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, ஒடிசா மாநிலம்  கட்டாக்கில் மழைக்கான வாய்ப்புகள்  அதிகமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil