Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

100வது சதம்; சச்சின் கவலைப்படவில்லை - டிராவிட்

100வது சதம்; சச்சின் கவலைப்படவில்லை - டிராவிட்
, வியாழன், 12 ஜனவரி 2012 (15:18 IST)
FILE
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம் பற்றி அவர் தன்னளவில் எந்த வித கவலையுமில்லமல்தான் இருக்கிறார் என்று ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

அவர் இது பற்றி எந்த விதக் கவலையுமில்லாமல் இருக்கிறார், அணி விவாதங்களிலும் இதைப் பற்றி நாங்கள் பேசுவதில்லை என்கிறார் டிராவிட்.

"நாங்கள் அணிக் கூட்டங்களில் இது பற்றி பேசுவதே இல்லை என்பதுதான் உண்மை. சச்சினும் மிகவும் ரிலாக்ஸாகவே காணப்படுகிறார்.

மும்பையில் சச்சின் 90 ரன்களை எடுத்தார், இங்கு 73 மற்றும் 80 ரன்களை எடுத்துள்ளார். இதனால் அவர் நிச்சயம் அதனருகில் இருக்கிறார். மேலும் முக்கியமானது சில இன்னிங்ஸ்களாகவே டெண்டுல்கர் மிகவும் அழகாக பேட்செய்து வருகிறார்.

எனவே அவர் பெர்த்தில் இந்தச் சாதனையை எங்களுக்காக நிகழ்த்தினால் சிறப்பாக இருக்கும். ஆனால் அவரது மனத்தில் இப்போது இருப்பது என்னவெனில் அவர் இந்தத் தொடரில் மிகச்சிறப்பாக ஆடி வருகிறார் என்பதே.

இவ்வாறு கூறினார் டிராவிட்.

Share this Story:

Follow Webdunia tamil