ஐ.பி.எல். போட்டி லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் வீரர் ஹர்பஜன் சிங்கின் அபார பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
பூவா தலையா வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரோகித் சர்மா 87 ரன்கள் எடுத்தார். சச்சின் 5 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
4 ஓவர் வீசி 18 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய ஹர்பஜன் சிங் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.