Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரசிகர்களின் அன்பு என் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது!

ரசிகர்களின் அன்பு என் கிரிக்கெட் வாழ்வில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது!
, புதன், 23 ஜனவரி 2013 (12:44 IST)
FILE
உலகம் முழுதும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இதயம் கனிந்த அன்பும், பாசமும் தனது கிரிக்கெட் வாழ்வில் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே முதன் முதலாக நடிக்கும் 'மாய்' என்ற இந்திப் படத்தின் அறிமுக விழாவில் சச்சின் கலந்து கோண்ட போது இவ்வாறு பேசினார்.

"என்னுடைய தந்தை எனக்கு பெரிய அகத்தூண்டுதலாக இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. பிறகு என் சகோதரர்கள், என் மனைவி மற்றும் மனைவியின் பெற்றோர் ஆகியோர் என் கிரிக்கெட் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகித்தனர். ஒவ்வொரு கட்டத்திலும் சில இலக்குகளை எட்ட வேண்டும், சில விஷயங்கள் அதற்கு உங்களுக்கு தாக்கமாக இருக்கும்" என்றார் சச்சின்.

ஆஷா போஸ்லே குறித்து அதனது நினைவோடையையும் அவர் குறிப்பிட்டார். "இந்திய இசையில் ஆஷாஜியின் தாக்கம் என்னவென்று அனைவரும் அறிவர். அவரது பாடல்களை கேட்டுத்தான் நான் வளர்ந்தேன் என்றால் மிகையாகாது. எனக்கு பிடித்தமான பாடல் உம்ரோ ஜானில் 'ஈன் ஆன்கோ கி மஸ்தி கே' என்ற பாடலாகும்.

சினிமாவில் நடிக்க ஆசையா? என்று கேட்டதற்கு சச்சின் , "கிரிக்கெட் ஆடும் வரை கிரிக்கெட்தான், ஒரு நேரத்தில் ஒன்றைத்தான் செய்வேன்" என்றார் சச்சின்!

Share this Story:

Follow Webdunia tamil