மோசமான நடுவர் தீர்ப்புகள்! கூடுதல் ஆக்ரோஷம்- இந்தியா வேதனை தோல்வி!
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (12:12 IST)
407
ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இன்று 87/1 என்று களமிறங்கிய இந்தியா 366 ரன்கள் வரை வந்து நியூசிலாந்தை அச்சுறுத்தியது. ஆனால் கடைசியில் 366 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 40 ரன்களில் ஒரு மகத்தான வெற்றி வாய்ப்பை போராடி நழுவ விட்டது. நியூசீலாந்து டெஸ்ட் தொடரில் 1- 0 என்று முன்னிலை. தோனியின் அயல்நாட்டு கறுப்ப்புப் புத்தகத்தில் மேலும் ஒரு பக்கம் சேர்ந்துள்ளது.
முதலில் முரளி விஜய்க்கு பேடில் பட்டு சென்ற பந்தை கேட்ச் என்று தீர்ப்பளித்தார் நடுவர், இன்று மிக முக்கியக் கட்டத்தில் அஜின்கியா ரஹானேயிற்கு பந்து மட்டையில் நன்றாக பட்டு பேடில் படுகிறது நடுவர் எல்.பி. என்று கையை உயர்க்த்தினார் அது நாட் அவுட். இது தோல்விக்கு ஒரு முக்கியக் காரணமாக ஆகிவிட்டது.மேலும் கடைசியில் தோனியை வீழ்த்திய பந்தும் நோ-பால் என்பது போலவே தெரிந்தது. சந்தேகமாக இருக்கும்போது சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மனுக்குச் சாதகமாகவே அளிக்கவேண்டும், ஏனெனில் ஒருமுறை அவுட் என்றால் கதை முடிந்தது. ஆனால் பவுலருக்கு அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்த வாய்ப்பிருக்கிறது. நடுவர் தீர்ப்பும் இன்றைய தோல்விக்கு ஒரு காரணம்.
இன்று காலை வந்தவுடன் புஜாரா 2 ரன்களில் சவுத்தீயின் அபாரமான ரைசிங் அவுட் ஸ்விங்கருக்கு வாட்லிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.