இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஒய்வு பெற்ற சில மணி நேரங்களிலேயே அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது, சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது முறைப்படி ராஷ்ட்ரபதி பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இதற்கான ஒத்திகை விழா பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
பாரத் ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.