பிப்ரவரி 4 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது
, வெள்ளி, 17 ஜனவரி 2014 (12:33 IST)
டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத் ரத்னா விருதை வழங்குகிறார்.
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஒய்வு பெற்ற சில மணி நேரங்களிலேயே அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
தற்போது, சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது முறைப்படி ராஷ்ட்ரபதி பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இதற்கான ஒத்திகை விழா பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறுகிறது.