தென் ஆப்பிரிக்கா தொடருக்கு பிறகே 'டெக்னிக்'-ஐ மறு பரிசீலனை செய்தேன் - தவான்
, செவ்வாய், 11 மார்ச் 2014 (13:38 IST)
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சோபிக்காததையடுத்து தனது டெக்னிக்கை மறு பரிசீலனை செய்தேன் என்று இந்திய துவக்க வீரரும் உலக சாதனைக்கு சொந்தக்காரருமான ஷிகர் தவான் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் 4 இன்னிங்ஸ்களில் 76 ரன்கள், அதிகபட்ச ஸ்கோர் 29. நியூசீலாந்தில் மாறாக ஒரு சதம் மற்றும் ஒரு 98 இரண்டுமே இந்தியா வெற்றி பெறும் நிலைக்குச் செல்ல உதவிய இன்னிங்ஸ்.தன்னுடைய நியூசீலாந்து எழுச்சிக்குக் காரணம் என்ன என்பதை அவர் பிரபல கிரிக்கெட் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்:
தென் ஆப்பிரிக்காவில் எனது பேட்டிங் பின்னடைவு கண்டது, அதன் பிறகு காரணங்களை ஆராய்ந்தேன், ஒரு பேட்ஸ்மெனாக, துவக்க வீரராக எந்த ஷாட்களை ஆடவேண்டும் எதைத் தவிர்க்கவேண்டும் என்று முடிவெடுத்தேன்.