உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதியில் இலங்கை அணி சற்று முன் தரங்கா விக்கெட்டை ஜாகீர் கானிடம் இழந்தது. 20 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த தரங்கா ஜாகீரின் அவுட் ஸ்விங்கருக்கு சேவாகின் அருமையான கேட்சிற்கு ஆட்டமிழந்தார்.
முதல் 5 ஓவர்களில் ரன்கள் வருவது கடினமாக அமைந்தது. சுமார் 3 பவுண்டரிகளை யுவ்ராஜ், ரெய்னா, கோலி ஆகியோர் தடுத்தனர். ஃபீல்டிங் அபாரமாக உள்ளக்டு.
ஸ்ரீசாந்த் இதுவரை ஒழுக்கமாக வீசி வருகிறார். இருப்பினும் தில்ஷான் அவரை ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் விளாசினார்.
ஜாகீர் 4-வது ஓவரை வீசி வருகிறார் 4 ரன்களை மட்டும் கொடுத்து தரங்காவை வீழ்த்தினார்.