முந்தைய பயிற்சியாளர் கேரி கர்ஸ்டனிடம் வீரர்களுக்கு ஏகப்பட்ட மரியாதை இருந்தது. ஏனெனில் அவர் இரண்டு கிரிக்கெட் வடிவங்களிலும் இந்திய அணியை சிறப்பாக செயல்படச்செய்தார். பயிற்சிகள் அவரது பார்வையில் ஆரோக்கியமாகவும், போட்டி நிறைந்ததாகவும் இருந்தது. அவர் சென்ற பிறகே இந்திய கிரிக்கெட் நழுவியது... சரிந்தது.
2015 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கவேண்டாம் என்று சுனில் கவாஸ்கர் அந்தப் பத்தியில் தெரிவித்துள்ளார்.