கால்லேவில் நடந்து வரும் ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விஷயம் ஜெயவர்த்தனே சதம் அடித்ததுதான்.
379 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இன்று 4 நாள் ஆட்டத்தை தொடர்ந்த இலங்கை அணியின் ஜெயவர்த்தனே - மேத்யூஸ் இணை ஓரளவு தாக்கு பிடித்து அணியின் எண்ணிக்கை உயர்த்தது.
அபாரமாக விளையாடி சதம் எடுத்த ஜெயவர்த்தனே 105 ரன்னில் ஹரிஸ் பந்தில் ஆட்டம் இழந்தார். இந்த இணை 6வது விக்கெட்டுக்கு ரன்கள் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து ரன்தேவ் களம் இறங்கி விளையாடி வருகிறார். தற்போது இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. மேத்யூஸ் 78 ரன்னில் விளையாடி வருகிறார். இலங்கை அணிக்கு இன்னும் 4 விக்கெட்டுகளே இருக்கின்றன. ஆனால் வெற்றிக்கு இன்னும் 164 ரன்கள் தேவைப்படுகிறது.