கோலிக்குப் பிறகு மட மட... இந்தியா 264 ரன்கள்!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (17:52 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இலங்கையால் முதலில் பேட் செய்ய அனுப்பப்பட்ட இந்தியா 39 ஓவர்களி 195/3 என்ற நிலையிலிருந்து 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 264 ரன்களை மட்டுமே எடுத்தது.
கோலி அஜந்தா மெண்டிஸ் பந்தில் பவுல்டு ஆகி 48 ரன்களில் வெளியேறியபோது தவான் 76 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் அவரே அதன் பிறகு 18 ரன்கள் மட்டுமே எடுத்து 94 ரன்களில் அஜந்தா மெண்டிஸின் ஒன்றுமில்லாத நேர் பந்தில் பவுல்டு ஆனார். பந்து எழும்பவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர் சாதுரியமாக ஆஃப் ஸைடை வலுப்படுத்தி லெக் திசையில் இடைவெளி விட்டார் அந்த பொறியில் சிக்கினார் தவான், நேர் பந்தை லெக் திசையில் அடிக்க முயன்று பவுல்டு ஆனார். 114 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சர்.
கார்த்திக் களமிறங்கி அதே ஓவரில் ஒரு அற்புதமான கட் ஷாட்டில் பவுண்டரி அடித்து இந்திய ஸ்கோரை 200 ரன்களுக்கு உயர்த்தினார். ஆனால் கடைசி பந்து கேரம் பால் ஆக சற்றே கூடுதலாக எழும்ப வாரிக்கொண்டு அடிக்கப்போய் கொடியேற்றினார். அருகிலேயே டெசில்வா கையில் கேட்ச் ஆனது.