கேரம் பந்தில் கோலி காலி! தவான் அபாரம்!
, வெள்ளி, 28 பிப்ரவரி 2014 (15:36 IST)
ஆசியக் கோப்பை கிரிக்கெட் இன்றைய போட்டியில் இந்தியா சற்று முன் வரை 31 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தவான் 75 ரன்களுடனும், ரஹானே 6 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். இந்தியா 31 ஓவர்களில் 150/2.
ரோகித் சர்மா தவறு செய்து அவுட் ஆன பிறகு தவான், கோலி ஜோடி இணைந்து 103 பந்துகளில் 97 ரன்களை 2வது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர்.கோலி அதி அற்புதமான ஷாட்களுடன் 51 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சர் சகிதம் 48 ரன்கள் எடுத்திருந்தபோது அஜந்தா மெண்டிஸின் கேரம் பந்தில் பவுல்டு ஆனார். அவர் செய்த தவறு பேட்டைத் திருப்பி ஆஃப் திசையில் ஆட முயன்றதே. நேராக ஆடியிருந்தால் அது ஒரு நேர் நேர் தேமா டெலிவரி. கோலியை இப்போதெல்லாம் அரைசதத்திற்குள் எடுத்தால் அது எதிரணியினருக்கு பெரிய சக்சஸ். மேலும் கோலி அரை சதம் எடுத்தால் இந்தியா இதுவரை வெற்றிபெற்றுள்ளது. இன்று அரை சதம் இல்லை.ஷிகர் தவான் ஒரு முனையில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் நன்றாக ஆடி வருகிறார்.