இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ளே மீதான மோசடி வழக்கில் விசாரணை நடத்த காவல்துறைக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொழிலதிபர் குமார் வி.ஜகிர்தார் என்பவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தன்னுடைய முன்னாள் மனைவி சேதனா, அனில் கும்ளே ஆகியோர் தனது மகளின் பாஸ்போர்ட் புதுப்பிப்பதில் முறைகேடு செய்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
எனது கையெழுத்தை கும்ளே முறைகேடாக அதில் போட்டுள்ளார் என்றும் குற்றம்சாற்றியிருந்தார்.
மேலும் இது பற்றி பாரதிநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார் ஜகிர்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இது குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.