Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கும்ளேயிடம் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு!

கும்ளேயிடம் மைக்கேல் கிளார்க் மன்னிப்பு!
, திங்கள், 14 ஜனவரி 2008 (16:41 IST)
சிட்னி கிரிக்கெட் டெஸ்ட் சர்ச்சையில் மைக்கேல் கிளார்க் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்து உடனே நடையைக் கட்டாமல் மைதானத்தில் அதிக நேரம் நின்றது மற்றும் கங்கூலிக்கு 2வது இன்னிங்சில் தரையில் பட்டு கேட்ச் பிடித்தது ஆகியவை குறித்து கும்ளே கடுமையாக விமர்சனம் செய்தார். மைக்கேல் கிளார்க் தான் தவறு செய்துவிட்டதாக இந்திய அணித் தலைவர் கும்ளேயிடம் மன்னிப்பு கோரியதாக ஆஸ்ட்ரேலிய செய்தி ஊடகங்களதெரிவிக்கின்றன.

அனில் கும்ளேயிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கிளார்க் தனது செயலுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால் சவ்ரவ் கங்கூலியின் கேட்சைத் தான் முறையாகத்தான் பிடித்தேன் என்பதில் இன்னமும் பிடிவாதம் காட்டி வருகிறார்.

மைக்கேல் கிளார்க் மன்னிப்பு கேட்டுள்ளதை அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பதட்டமான சூழல் சற்றே குறைந்துள்ளதாக தெரிகிறது.

இந்திய- ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் பெர்த் மைதானத்தில் நாளை மறு நாள் தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil