கால்லேவில் கடந்த வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணிக்கு 379 ரன் வெற்றி இலக்காக ஆஸ்ட்ரேலியா அணி நிர்ணயித்துள்ளது.
முதல் இன்னிங்சில் ஆஸ்ட்ரேலியா அணி 273 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் ஹஸ்ஸி 95 ரன்கள் எடுத்தார். பாண்டிங் 44 ரன்னும், ஹட்டின் 24 ரன்னும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை அணி 105 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பரனவிதனா 29 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர்.
168 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா அணி 2வது இன்னிங்சில் 210 ரன்னுக்கு ஆட்டம் இழந்தது. கிளார்க் அதிகபட்சமாக 60 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் சொல்லும் அளவுக்கு விளையாட வில்லை.
378 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்ட்ரேலியா அணி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 379 ரன்களை நிர்ணயித்துள்ளது.
இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி முதல் ஓவரிலேயே பரனவிதனா டக் அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் தில்சான் 12 ரன்னில் வீழ்ந்தார். 15 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்த இலங்கை அணிக்கு சங்ககரா - ஜெயவர்த்தனே இணை தற்போது விளையாடி வருகிறது.
தற்போது 2 விக்கெட்டுகளை இழந்து 32 ரன்கள் எடுத்துள்ள இலங்கை அணி தடுமாறி வருகிறது. ஆஸ்ட்ரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.