ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்திய அணியின் முன்னாள் தலைவர் கங்கூலிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் புனே அணிக்காக அவர் விளையாட உள்ளார்.
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடங்கியபோது கொல்கத்தா அணிக்கு தலைவராக இருந்த கங்கூலி அடுத்த ஐ.பி.எல். போட்டியில் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து 3 வது ஐ.பி.எல். போட்டியில் மீண்டும் கொல்கத்தா அணித் தலைவராக கங்கூலி நியமிக்கப்பட்டார்.
ஆனால் அந்த தொடரின் போது கங்கூலி சரியாக விளையாடாததால் தற்போது 4வதாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். போட்டியில் எந்த அணி நிர்வாகமும் கங்கூலியை ஏலம் எடுக்கவில்லை.
இதனால் கங்கூலி விரக்தி அடைந்ததோடு, கொல்கத்தா அணி நிர்வாகத் தலைவர் ஷாருக்கானுக்கு எதிராக அவரது ரசிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் விளையாடி கங்கூலிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புனே வாரியர்ஸ் அணியின் கோரிக்கை ஐ.பி.எல் நிர்வாகம் ஏற்றுக் கொண்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதனால் காயம் அடைந்துள்ள ஆஷிஷ் நெக்ராவுக்கு எதில் கங்கூலி புனே வாரியர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் மும்பை அணிக்கு எதிராக நாளை நடைபெறும் போட்டியில் கங்கூலி விளையாடுகிறார்.