Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஐபிஎல் 7: சுனில் கவாஸ்கர் பிசிசிஐ தலைவராக நியமனம்!

ஐபிஎல் 7: சுனில் கவாஸ்கர் பிசிசிஐ தலைவராக நியமனம்!
, வெள்ளி, 28 மார்ச் 2014 (11:38 IST)
ஐபிஎல் 7 கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை பிசிசிஐ தலைவராக சுனில் கவாஸ்கர் செயல்படுவார் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை சூப்பர்கிங்ஸ், மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடவும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 
 
வீரர்கள், வர்ணனையாளர்கள் தவிர இந்தியா சிமெண்ட்ஸ் ஊழியர்கள் அல்லது அதன் துணை நிறுவன ஊழியர்கள் எந்த வித கிரிக்கெட் வாரிய கடமைகளிலும் இருக்கக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
ஐபிஎல். அல்லாத பிசிசிஐ நிர்வாகப்பொறுப்புகளை ஷிவ்லால் யாதவ் கவனிப்பார்.
 
ஐபிஎல். போட்டிகளை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
தோனி பற்றி நேற்று மீடியாக்களில் வெளியான செய்திகள் மிகவும் வருந்தத்தக்கவை என்றும் அவர் மீது தவறான முறையில் பழி சுமத்தப்படுகிறது என்றும் பிசிசிஐ உச்சநீதிமன்றத்திடம் தெரிவித்தது. 

Share this Story:

Follow Webdunia tamil