லார்ட்சில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 54 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுகளை இழந்து 474 ரன்கள் குவித்த இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்தது. அந்த அணியின் பீட்டர் அபாரமாக விளையாடி இரட்டை சதம் எடுத்தார்.
இதைத் தொடர்ந்து விளையாடி இந்திய அணி நேற்று ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர்கள் முகுந்த் 8 ரன்னிலும், கம்பீர் 7 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.
இன்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய வீரர் முகுந்த் அபாரமாக விளையாடி வருகிறார். இவர் 62 பந்தில் 36 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 4 பவுண்டரிகள் அடங்கும். மற்றொரு தொடக்க வீரர் கம்பீர் 13 ரன்னில் உள்ளார்.