அதிரடி மன்னன் விரேந்திர சேவாக், வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ரவீந்தர் ஜடேஜா அணியில் தேர்வு செய்யப்படவில்லை. சி.பி. தொடரில் அவரது விளையாட்டு சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை என்பதால் அவர் நீக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 16க்கும் கீழ். இவருக்குப் பதிலாக ஆசியக் கோப்பை அணியில் இடம்பெறாத பிராக்யன் ஓஜா மீண்டும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் ஓரளவுக்கு நன்றாக வீசும் விக்கெட் வீழ்த்தும் திறனுடைய பிரவீண் குமாருக்கு அணியில் இடமில்லை.
உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார். மனோஜ் திவாரி, லெக்ஸ்பின்னர் ராகுல் ஷர்மா ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
பத்தான் சகோதரர்களுக்கு அணியில் இடமில்லை. வீரத் கோலி தொடர்ந்து உதவி கேப்டனாக பணியாற்றுவார்.
அஸோக் டிண்டா, வினய் குமார் ஜாகீர் கானுக்கு உறுதுணையாக இருப்பர். ஹர்பஜனுக்கு மீண்டும் இடமில்லை. அஷ்வின் அணியில் இடம்பெற்றுள்ளார்.
15 வீரர்கள் கொண்ட அணி வருமாறு:
சேவாக், கம்பீர், வீரத் கோலி, அஷ்வின், உமேஷ் யாதவ், அசோக் டிண்டா, தோனி, சுரேஷ் ரெய்னா, வினய் குமார், ரோஹித் ஷர்மா, பிராக்யன் ஓஜா, அஜின்கியா ரஹானே, மனோஜ் திவாரி, ராகுல் ஷர்மா, ஜாகீர் கான்.