Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரட்டை சதத்தை நோக்கி கம்பீர்: இந்தியா-361/1

Webdunia
செவ்வாய், 24 நவம்பர் 2009 (15:16 IST)
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் கௌதம் கம்பீர் இரட்டை சதத்தை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறார். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய திராவிட அரை சதம் பூர்த்தி செய்துள்ளார்.

கான்பூரில் நடந்து வரும் இப்போட்டியில், முதலில் பேட் செய்து வரும் இந்திய அணி 71வது ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 361 ரன்கள் எடுத்துள்ளது. கௌதம் கம்பீர் 164 ரன்கள், திராவிட் 52 ரன்கள் எடுத்து விளையாடி வருகின்றனர்.

முன்னதாக, துவக்க வீரர் சேவாக் அதிரடியாக விளையாடி தனது 16வது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார். எனினும், 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முரளிதரன் பந்தில், தில்ஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments